Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உத்திரமேரூர் அருகே தீக்குளித்து தற்கொலை செய்த  பெண்ணுக்கு கொரோனா

ஜுலை 10, 2020 11:17

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம் திருவந்தவார் கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது பெண். இவரது கணவர் ஒரு ஆண்டுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

உத்திரமேரூர் ஒன்றியம் திருவந்தவார் கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது பெண். இவரது கணவர் ஒரு ஆண்டுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 20-ந்தேதி அந்த பெண் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்